தோட்டத்தில் வேலை செய்யும் போது பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு..

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள தெற்கு சித்தூரை சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி .இவரது மனைவி தமிழரசி(வயது 50) இவர் பெத்தநாயக்கனூரில் உள்ள அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலது காலில் பாம்பு கடித்தது .இவரை சிகிச்சைக்காக அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு  எடுத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து கணவர் தங்கவேல் கோட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.