கோவை பள்ளிக்கு மீண்டும் வெடுகுண்டு மிரட்டல்.!!

கோவை வடவள்ளிஅருகே உள்ள சோமையம் பாளையத்தில் பத்மஸ்ரீ சேஷாத்திரி மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2,500 க்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்துக்கு “இ -மெயில் ” மூலம் கடந்த 1-ந் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது . இதையடுத்து மாணவ – மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீவிர சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் அதே பள்ளிக்கூடத்துக்கு நேற்று இரவு “இ-மெயில் ” மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினார்கள்.. வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை .வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இந்த பள்ளிக்கூடத்தில் இன்று பிளஸ் 1 தேர்வு நடக்கிறது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.