கத்தி முனையில் கோவை வியாபாரிடம் பணம் பறிப்பு- வாலிபர் கைது..!

கோவை சிவானந்த காலனி வி,சி.கே. என். லேஅவுட் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் அஜித்குமார் (வயது 23 )செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காந்திபுரம் பாரதியார் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது புல்லட் பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி சட்டை பையில் இருந்து ரூ. 1850 -ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இது குறித்து அஜித்குமார் காட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் பக்கம் உள்ள குருவாரெட்டியூரை சேர்ந்த முருகேசன் வயது 31 என்பவரை கைது செய்தார். இவரிடமிருந்து பைக் ‘கத்தி, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது பங்களாபுதூர், அனுப்பர்பாளையம் , அம்மாபேட்டை,காட்டூர் ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கனவே கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.