கோவை வாசனை திரவியம் கடையில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து- ரூ 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்..!

கோவை தெற்கு உக்கடம், ஜி. எம். நகரை சேர்ந்தவர் குஞ்சி மூசா (வயது 50) இவர் கோவை வெரைட்டிஹால் ரோடு – என்.எச். ரோடு சந்திப்பில் இந்தியன் அத்தர் ஸ்டோர் என்ற பெயரில் வாசனை திரவியம் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் இவரது கடையில் திடீரென்று தீ பிடித்து எரிந்தது .இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயைணைத்தனர் .இந்த தீபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வாசனை திரவியம் , அத்தர்,ஊதுபத்தி சாம்பிராணி ஆகியவை எரிந்து நாசமானது. இது குறித்து குஞ்சு மூசா வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.