மாஜி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு.!

கோவை வடவள்ளி -தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஓணாப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜானகி சங்கர் புருஷோத்தமன் (வயது 72) இவர் ஸ்பிக் உர நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 25 ஆம் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேந்திரன் என்பவர் ஜானகி சங்கருக்கு போன் செய்து அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினார் . இதையடுத்து ஜானகி சங்கர் புருசோத்தமன் நேற்று அங்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், 5 கை கடிகாரம் ,ஒரு கேமரா ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது . இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்தார் . சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.