கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக் கேஷியரிடம் பணம் பறிப்பு – 3 பேர் கைது.!!

கோவை : தஞ்சாவூர் பக்கம் உள்ள பாபநாசம் ,பசுபதி கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 36) இவர் தற்போது ராமநாதபுரம் பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருகிறார். 80 அடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 6 ஆண்டுகளாக கேஷியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ராமநாதபுரம் வள்ளியம்மாள் வீதியில் உள்ள பூங்கா அருகே நடந்து சென்றார். அப்போது 3 பேர் இவரை வழிமறித்து வயிற்றில் கத்தியை வைத்து அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சதீஷ் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் வழக்கு பதிவு செய்து இராமநாதபுரம் சுப்பிரமணியர் கோவில் வீதியைச் சேர்ந்த வினோத் ( வயது 23)நடராஜ் தேவர் காலனியை சேர்ந்த ஸ்ரீ ஹரி ( வயது 21)பழைய சுங்கம், காந்தி நகரை சேர்ந்த சந்திரகுமார் ( வயது 20)ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது கொலை முயற்சி உட்பட 2 பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.