நாய்க்கு புத்தாடை அணிவித்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய முன்னாள் பாஜக அமைச்சர்.!!

பெங்களூரு-தன் வீட்டில் வளர்த்த நாய்க்கு புத்தாடை, தொப்பி அணிவித்து, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.பாஜக வை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் அரவிந்த லிம்பாவளி. இவர், மஹாதேவபுரா முன்னாள் எம்.எல்.ஏ.,நடந்து முடிந்த தேர்தலில், இவரது மனைவி மஞ்சுளா இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.பெங்களூரு நியூ திப்பசந்திராவில் தன் வீட்டில் உள்ள ‘மேக்ஸ்’, ‘டேக்’ என்ற நாய்கள் முன்னிலையில், தான் வளர்த்த மூன்று வயது ‘போலோ’ நாய்க்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.தான் வளர்த்த  மூன்று செல்ல பிராணிகளுக்கும் புத்தாடை அணிவித்து, தொப்பி அணிவித்திருந்தார். ‘கேக்’ வெட்டி அவைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். சுவையாக இருந்ததால் ருசித்து சாப்பிட்டன. குடும்ப உறுப்பினர்கள், ‘ஹேப்பி பர்த்தடே’ ‘போலோ’ என்று கூறி கை தட்டி மகிழ்ந்தனர்.இந்த படங்களை சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.