ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்..!

டைத்தேர்தல் நடத்தைப்பெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 9 மணி வரை 10.10% வாக்குகள் பதிவு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர்களில் 2 மணி நேரத்தில் 10.10% பேர் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். அதாவது, 2.27 லட்சம் வாக்காளர்களில் 2 மணி நேரத்தில் 22,970 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

காலை 9 மணி வரை 12,679 ஆண் வாக்காளர்களும், 10,294 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர். ஈரோடு கிழக்கில் 238 வாக்குசாவடிகளியிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.