கோவை பைனான்ஸ்சில் பணம் திருடிய ஊழியர் கைது..!

கோவை ரத்தினபுரியில் உள்ள ஜி.பி.எம் நகரில் வசிப்பவர் நாச்சிமுத்து வயது 30 அதே பகுதியில் பைனான்ஸ் நடத்தி வருகிறார். , இவரது அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் , கூம்பூரைச் சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வசூல் செய்யப்பட்ட பணம் ரூ 35 ஆயிரத்தை திருடிக் கொண்டு எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து நாச்சிமுத்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.