எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தை தட்டி கேட்டதற்கு பாட்டிலால் அடி – ஓபிஎஸ் பேச்சு.!!

 எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தை தட்டி கேட்டதற்கு என்னை தண்ணீர் பாட்டிலால் அடித்தார்கள் என ஓ.பி.எஸ் பேச்சு

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் முதல்வரும், அதிமுக தொ.உ.மீ.கு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.

அவர் கூறும் போதும், “என்னை கேள்வி கேட்பதற்கு ஆர்.பி உதயகுமாருக்கு தகுதி கிடையாது. தேர்தலில் போட்டியிட முதல் விருப்பமாக ‘வாளி’ சின்னம் கேட்டுள்ளேன், அதே போல பலாப்பழம் மற்றும் திராட்சை சின்னமும் கேட்டுள்ளேன். என்னை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலை பார்ப்பது காலத்தின் சூழ்நிலை.

இதை ஒரு குற்றமாக சொல்ல முடியாது. முன்பெல்லாம் அதிமுகவில் சாதாரண தொண்டர்கள் போட்டியிடலாம். ஆனால் இன்றைய நிலைமை என்ன? எடப்பாடி பழனிச்சாமி இதில் பல திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம். இதை கேட்டதால் பொதுக்குழுவில் எனக்கு அவர்கள் தந்த பரிசு தண்ணீர் பாட்டிலால் என்னை அடித்தது..! எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.