புதுக்கோட்டையில் 2ம் நாளாகத் தொடரும் ED சோதனை..!

புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் அமலாக்கத் துறையினரின் சோதனை தொடர்கிறது. புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் அமலாக்கத் துறையினரின் சோதனை தொடர்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரி அமைத்து மணல் விற்பனையில் ஈடுபட்டு வருபவா் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சோந்த ராமச்சந்திரன். இவா், அமைச்சா் செந்தில் பாலாஜியுடன் நெருக்கமானவா், மணல் குவாரிகளில் முறையான கணக்கு காண்பிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காரணமாக அமலாக்கத் துறையினா், ராமச்சந்திரன் வீடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது மணல் குவாரிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் திடீா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். | அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் சோதனை! செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை, விடிய விடிய நடைபெற்று புதன்கிழமையும் தொடர்கிறது. இரண்டாம் நாளில் புதிதாக கறம்பக்குடி அருகே உள்ள குழத்திரான்பட்டு பகுதியிலுள்ள ராமச்சந்திரனின் உறவினரும் அரசு ஒப்பந்ததாரருமான கரிகாலன் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய ஆயுதக் காவல் படை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்..