தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கோவை ஓட்டல் அதிபர் விஷம் குடித்து தற்கொலை..!

கோவையை அடுத்த காருண்யா நகர் பக்கம் உள்ள இருட்டு பள்ளம், சிறுவாணி கார்டனை சேர்ந்தவர் ஜெயக்குமார் ( வயது 64 )இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அங்கு ஓட்டல் நடத்தி வந்தார். கொரோனா காலத்தில் அவருக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது.இதனால் ஓட்டலை மூடிவிட்டார்.அதில் இருந்து மன அழுத்தத்துடன் காணப்பட்டார்.இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுபபடைந்த அவர் நேற்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மகன் சாமுவேல் காருண்யா நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.