சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு-பைக் ஆசாமி கைவரிசை..!

கோவை அருகே உள்ள குளத்துப்பாளையம் வெள்ளிங்கிரி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் சண்முகம் .இவரது மனைவி லீலாவதி (வயது 42 ) இவர் நேற்று அங்குள்ள தனது தாயார் வீட்டுக்கு செல்ல குளத்துப்பாளையம் ,ஊர் கவுண்டர் வீதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் 2 ஆசாமிகள் வந்தனர்.அவர்களில் பின்னால் இருந்தவன் இறங்கி வந்து லீலாவதி கழுத்தில் நடந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு பைக்கில் ஏறிதப்பி ஓடிவிட்டான். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.