கோவையில் போதை மாத்திரை விற்பனை- 3 பேர் கைது..!

கோவை சவுரிபாளையம் ரோடு, ஜி.வி ரெசிடென்சி பகுதியில் பீளமேடு சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் போதை மாத்திரை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.. விசாரணையில் அவர்கள் சவுரிபாளையம் ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த தினேஷ் ( வயது 26) என்பதும் தெரிவது அவர்களிடம் இருந்து 40 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது .தப்பி ஓடிய யஸ்வந்த் என்பவரை தேடி வருகிறார்கள்.

இதே போல் ஆர் எஸ் புரம் பகுதியில் போலீசார் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது அங்குள்ள ஆரோக்கியசாமிரோடு மைதானம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஆர் .எஸ். புரம், சிடி டி காலனி சேர்ந்த வசந்தகுமார் ( வயது 23) சுந்தரம் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இஸ்மாயில் ஷெரீப் (வயது 42 )என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 18 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.இதை எடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..