வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 7 பேர் மீது இளம்பெண் புகார்..!

கோவை போத்தனூர் மைல்கல் பாரதி நகரை சேர்ந்தவர் முகம்மது நரித் (வயது 33) இவருக்கும் தர்மபுரி மாவட்டம் மாந்தோப்பைச் சேர்ந்த ரேஷ்மா (வயது 28) என்பவருக்கும் 9-12- 2019 அன்று திருமண நடந்தது. இவர்கள் போத்தனூரில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.இந்த நிலையில் கணவர் முகமது நரித் உள்ளிட்ட குடும்பத்தினர் ரேஷ்மாவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினார்ளாம். .இது குறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரேஷ்மா புகார் செய்தார் .போலீசார் கணவர் முகமது நரித்மெரூ,
நிஷா, முகமது நயூம் நிசார், இராத்துல்லா, முபினா, மானு ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.