இருகூர் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் விநியோகம்.!!

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக இருகூர் பேரூராட்சி சார்பில் வாகனங்கள் மற்றும் வீடுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இருகூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி, சூலூர் வருவாய் ஆய்வாளர் கங்காராஜ், இருகூர் கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி மற்றும் இருகூர் பேரூராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.