கோவையில் சுற்றுலா சென்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள்..!

கோவை:- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆரம்ப நிலைய பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் செவித்திறன் குறைபாடு, கண்பார்வை குறைபாடு மற்றும் மன நலம் குன்றிய 36 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று 36 மாற்றுத்திறனாளிகள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒரு நாள் சுற்றுலாவாக போத்தனூரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அருங்காசியகம் மற்றும் பொள்ளாச்சி ஆழியர் அணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த வாகனத்தை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த சுற்றுலாவுக்காக ரூ.10 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 4 வாகனங்களில் சுற்றுலா சென்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.