புழல் சிறையில் சுய தொழில் பயிற்சி முடித்த 31 பெண் சிறைவாசிகளுக்கு டிஜிபி அமரேஷ் புஜாரி சான்றிதழ் வழங்கினார்..!

புழல் பெண்கள் தனிச்சிறையில் MSME சார்பில் விஜயகீதம் பௌன்டேஷன் மூலம் வயர் நாற்காலி,கட்டில் பின்னுதல், வயர் கூடைப் பின்னுதல், மெழுகுவர்த்தி செய்தல், மிதியடி செய்தல் ஆகிய ஒரு மாத கால பயிற்சி முடித்த 31 பெண் சிறைவாசிகளுக்கு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி சான்றிதழ்கள் வழங்கி தலைமை உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை சரக டிஐஜி ஆ.முருகேசன், தலைமையிட டிஐஜி இரா. கனகராஜ், MSME இணை இயக்குநர் கடே ரவி, உதவி இயக்குநர் ரைம்சைன் டி வில்சன், மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரேன்,  கிருஷ்ணராஜ், விஜயகீதம் பௌன்டேஷன் நிறுவனர்- பேராசிரியர் கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.