சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மார்ச் 4 முதல் 5 நாட்களுக்கு அனுமதி..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற மார்ச் 4ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சளி,காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.