முன்னாள் காதலிக்கு கொலை மிரட்டல் – ஐ.டி ஊழியர் கைது..!

கோவை : சேலத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை ( வயது 26) இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது தன்னுடன் படித்த அன்னூரைச் சேர்ந்த ஒரு மாணவியை காதலித்தார். இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர் .ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ராஜதுரை அந்த இளம் பெண்ணிடம் மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். அதற்கு அவர் மறுத்தார். இதனால் இருவரும் காதலிக்கும் போது ஒன்றாக எடுத்த புகைப்படத்தை ராஜதுரை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் அந்த இளம்பெண் புகார் செய்தார். இதை அறிந்த ராஜதுரை புகார் மனுவை திரும்ப பெறக் கோரி அந்த இளம் பெண்ணை தேடி சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது.இது குறித்து அந்த இளம் பெண்ணின் தந்தை அன்னூர் போலீசில் புகார் செய்தார்.. போலீசார் வழக்கு பதிவு செய்து ஐ.டி. ஊழியர் ராஜதுரையை நேற்று கைது செய்தனர் .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..