மது அருந்து விட்டு ஏற்பட்ட தகராறு: வாலிபரை குத்தி கொலை செய்த நபர் கைது 

மது அருந்து விட்டு ஏற்பட்ட தகராறு: வாலிபரை குத்தி கொலை செய்த நபர் கைது 

கோவை, வெள்ளலூர் கக்கன் வீதியைக் சேர்ந்த கோபிநாத். மனைவி ஜோதி , மகன் ராஜேஷ்குமார் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து வரும் கோபுநாத். அதே பகுதி பெட்ரோல் பங்கில் பணி புரியும் முல்லை நகரை சேர்ந்த முனியப்பன் என்பவர் . இரவு மதுரை வீரன் கோவில் அருகே இருவரும் மது அருந்து விட்டு பேசி கொண்டு இருந்தனர். இதற்க்கிடைய இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் முனியப்பன், கோபிநாத் மார்பில் கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார். இதுகுறித்து போத்தனூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் கோபிநாத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கோபிநாத் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை அடுத்து காவல் துறையினர் முனியப்பனை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.