கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு – இபிஎஸ் கடும் கண்டனம்.!!

அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அவா் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப் பதிவு: கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திமுக அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை தற்போது உயிரிழந்துவிட்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த துயர நிகழ்வு கண்டனத்துக்குரியது. மேலும், குழந்தையை இழந்து வாடும் குடும்பத்துக்கு உரிய நிவாரணமும், அக்குடும்பத்தை சாா்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பையும் வழங்க வேண்டும். மக்களை காக்கும் கடமையில் இருந்து திமுக அரசு ஒவ்வொரு நாளும் தவறுவதை இது போன்ற சம்பவங்கள் தொடா்ந்து நிரூபணம் செய்கின்றன எனத் தெரிவித்துள்ளாா் அவா்..