ரயில் தண்டவாளம் அருகே ரத்தக் காயங்களுடன் வாலிபர் சடலம் – கொலையா..?போலீசார் தீவிர விசாரணை.!!

கோவை சுந்தராபுரம்- மதுக்கரை இடையே உள்ள மேம்பாலத்துக்கு கீழ்பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து போத்தனூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயங்கள் இருந்தது. இதையடுத்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் போத்தனூர் அருகே உள்ள மைல் கல்லைச் சேர்ந்த வினித் என்ற ஆசிக் (வயது 22) என்பது தேடி வந்தது. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு வயதில் குழந்தை உள்ளது. இவர் வீட்டு உள் அலங்கார வேலை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த 7-ந்தேதி தேதி மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு சென்றார். இதை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர் . இதனால் மனமடைந்த வினித் வீட்டை விட்டு வெளியே சென்றார் .அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. அவரது மோட்டார் சைக்கிள் அங்குள்ள தனியார் கல்லூரியில் மீட்கப்பட்டது அவர் எப்படி இறந்தார்? ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா ?,அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.