பொள்ளாச்சி நகைக்கடையில் நகை திருட்டு – சிறுவன் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 27) இவர் பொள்ளாச்சி பஜார் வீதியில் கடந்த 20 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு நகைகளை சரிபார்த்தனர். அப்போது 8 பவுன் நகைகள் குறைவாக இருந்தது தெரிய வந்தது .இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அதே நகை கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். நகைகள் மீட்கப்பட்டது.அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர்கள் காப்பதில் அடைக்கப்பட்டார்..