நீதிமன்றங்களுக்கு இன்று மே 1 முதல் 31 வரை விடுமுறை …

நீதிமன்றங்களுக்கு இன்று மே 1 முதல் 31 வரை விடுமுறை …

கோவையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களுக்கு இன்று மே 1 முதல் 31 – ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோடைக் காலத்தையொட்டி மே 1 முதல் 31-ஆம் தேதி வரை நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, கோவை மாவட்ட முதன்மை மற்றும் கூடுதல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் மற்றும் குற்றப் பிரிவு நடுவர் நீதிமன்றங்களில் விசாரணை ஏதும் நடைபெறாது.

ஆனால், சிறப்பு மற்றும் விரைவு நீதி மன்றங்கள் வழக்கம் போல செயல்படும். மேலும், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் வழக்கம் போல செயல்படும்.

மாவட்ட முதன்மை நீதிமன்றம் செயல்படாததால் பிணை, முன் பிணை, அவசர வழக்குகள், அவசர சிவில் வழக்குகளை விசாரிக்க கோடைக் கால நீதிமன்றம் செயல்படும். இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது வாரத்தில் ஒரு நாள் விசாரணை நடத்தப்படும்.