கோவை லாட்ஜில் விஷம் குடித்த ஜோடி… இளம்பெண் மரணம் – வாலிபருக்கு தீவிர சிகிச்சை..

கோவை: நாகை மாவட்டம் வடபதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் கிருத்திகா( வயது 26) சிவகங்கை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 27) இவர்கள் இருவரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்கள். நேற்று லாட்ஜ் மேனேஜர் கணேசன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வாடகை கேட்கச் சென்றார். அப்போது அறையில் தங்கி இருந்த கிருஷ்ணனும்,அந்த பெண்ணும் எலி மருந்து சாப்பிட்டு விட்டதாக கூறினார்கள்.இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்தபோது கிருத்திகா பிணமாக கிடந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிருஷ்ணன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..