கோவையில் தொடரும் சந்தனமரம் கடத்தல் சம்பவம் – ஒரு வாலிபரை பிடித்து விசாரணை..!

கோவை சாய்பாபா காலனி கே.கே புதூரை சேர்ந்தவர் கார்த்திக் மாரியப்பன்(வயது 42). தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டின் அரகே உள்ள வளாகத்தில் சந்தன மரம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டது. உடனே அவர் வெளியே வந்து பார்த்தார். அப்போது, அங்கிருந்த சந்தன மரத்தின் சிறிய பகுதியை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் சந்தன மரம் வெட்டி கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து சந்தன மரங்களை வெட்டி கடத்துபவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மர்ம நபர்களை பிடிக்க தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.