வெள்ளியங்கிரி மலையில் தொடரும் மரணங்கள்… மேலும் ஒரு பக்தர் பலி.. என்ன காரணம்..?

தொண்டாமுத்தூர்:பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் உயிரிழந்தார். கடந்த மூன்று மாதங்களில், இதுவரை, 6 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.திருவண்ணாமலையை சேர்ந்தவர் லேகேஷ்,37. இவர், கோவை நீலாம்பூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 5ம் தேதி இரவு, பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார்.நேற்றுமுன்தினம், ஆறாவது மலையில் ஏறிக்கொண்டிருக்கும்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் சுமை தூக்குபவர்கள், லேகேஷை அடிவாரத்திற்கு தூக்கி வந்தனர்.அங்கு பரிசோதித்த மருத்துவ குழுவினர், லோகேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.வெள்ளியங்கிரி மலை ஏற, கடந்த பிப்ரவரி 17ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம், 2 பேரும், ஏப்ரல் மாதத்தில் ஒருவரும், இந்த மாதத்தில், தற்போது வரை மூன்று பேரும் என, மலை ஏறிய பக்தர்கள், மொத்தம் ஆறு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.