காதலனுடன் பேச மறுத்த கல்லூரி மாணவியை நடுரோட்டில் நண்பருடன் சேர்ந்து தாக்கிய மாஜி காதலன் மீது புகார்..!

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை ராஜ வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் .இவரது மகள் கமலி ஸ்ரீ (வயது 23) பீளமேட்டில் உள்ள உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது தன்னுடன் படித்த கவுரிசங்கர் என்பவரை காதலித்து வந்தாராம். அவரது பழக்க வழக்கங்கள் சரியில்லாததால் அவருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார் . இந்த நிலையில் கமலீஸ்ரீ நேற்று கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ராமநாதபுரத்தில் உள்ள தனது தோழியை பார்த்துவிட்டு அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே நடந்து வந்தார். அப்போது அங்கு தனது நண்பர் ஒருவருடன் வந்த கவுரி சங்கர் மாணவி கமலிஸ்ரீ யை வழிமறித்து பேசினார் . அவர் பேச மறுத்ததால் தகாத வார்த்தைகளால் அவரை திட்டி கைகளால் தாக்கினாராம். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தன் நண்பருடன் தப்பி ஓடி விட்டார் . இது குறித்து கமலிஸ்ரீ ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தப்பி ஓடிய முன்னாள் காதலன் கவுரிசங்கர் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை தேடி வருகிறார்கள்.