17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்- காதலன் போக்சோவில் கைது..!

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் ( வயது 27)கூலித் தொழிலாளி இவருக்கும் கருமத்தம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது .இந்த நிலையில் பாலசுப்பிரமணியம் கடந்த 14ஆம் தேதி அந்த சிறுமி ஆசைவார்த்தை காட்டி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார் .பின்னர் அருகம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதற்கிடையில் பாலசுப்ரமணியம் தன்னுடன் தங்க வைத்திருப்பது சிறுமி என்று தெரிந்தவுடன் சூலூர் மகளிர் நல அலுவலகத்திற்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர் .அவர்கள் விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர் .அப்போது சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது.. கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் பாலசுப்பிரமணியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..