வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் – 13 பேர் கைது..!

கோவை கணபதிபுதூர் பாலன் நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சரவணன் சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக மோகன் ( 35 )கார்த்திகேயன் (37) ஹரிஹரன் (37) சிவகுமார் (50) பாலமுருகன் (38) பிரகாஷ் (41) செல்லப்பன் ( 46 )மோகன்ராஜ் (27) ராம்குமார் ( 29 )உமர் சர்புதீன் (38 ) தனஞ்செயன் 36 பூபதி (35) தமிழ்செல்வன் (30)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து சீட்டாட பயன்படுத்தப்பட்ட ரூ. 36 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..