பாமக பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு – 3 பேர் மீது புகார்..!

கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54) பாமக பிரமுகர். இவர் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாசை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்துவிட்டு தனது காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்., திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே கார் வந்தபோது சரக்கு ஆட்டோ இவரது கார் மீது மோதியது. இதை ரவிச்சந்திரன் தட்டி கேட்டார் . இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ஆட்டோவில் இருந்த 3 பேர் இறங்கி வந்து ரவிச்சந்திரன் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்கள். இது குறித்து ரவிச்சந்திரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.