பைக் மீது கார் மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி..

கோவை: சேலம் மாவட்டம் மேச்சேரி அம்மன் நகரை சேர்ந்தவர் ஒபிலி ராஜு. இவரது மகன் நவநீத் முராரி (வயது 19) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ . படித்து வந்தார் .இவர் நேற்று வெள்ளலூர் பைபாஸ் ரோட்டில் புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது பைக் மீது மோதியது. இதில் நவநீத் முரளி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கார் ஓட்டி வந்த ஒண்டிப்புதூர், கம்பன் நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.