கோவையில் பைக் மீது லாரி மோதி கல்லூரி பேராசிரியை கணவர் பரிதாப பலி..

கோவை சாய்பாபா காலனி, பாரதி பார்க் 2வது வீதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 47)இவரது மனைவி ஜெய் ஸ்ரீ (வயது 38) இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பெண்கள் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.இவரது கணவர் ஆனந்த் நேற்று தனது மனைவி ஜெய் ஸ்ரீயை பார்க்க வடகோவை, மேட்டுப்பாளையம்,  ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது .இதன் நிலை தடுமாறி ஆனந்த் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி இவர் மீது ஏறியது. இதில் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் அவரது மனைவி ஜெய் ஸ்ரீ புகார் செய்தார் . போலீசார் பைக் ஓட்டி வந்த டி.வி.எஸ். நகரை சேர்ந்த மதன் (வயது 25 )கவுண்டம்பாளையம் லாரி டிரைவர் மோகன் (வயது 24) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.