66 முதலீட்டாளர்களிடம் ரூ.1 கோடியே 85 லட்சம் வசூலித்து நூதன மோசடி- தம்பதி கைது..!

கோவை: 66 பேரிடம் ரூ.1 கோடியே 85 லட்சம் வசூலித்து மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கூறியதாவது தனியார் நிதி நிறுவனம் நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் அருகே குச்சிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி கே.சபரிநாதன் (35) என்பவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். ஆகாஷ் சுருதி ஸ்பைஸ் பிரைவேட் நிறுவன உரிமையாளர் துரைராஜ் மற்றும் அவருடைய மனைவி சாரதா ஆகியோர் முதலீட்டு தொகைக்கு 8 முதல் 12 சதவீத வட்டி தருவதாக தெரிவித்தனர்.
தேயிலைத் தோட்டங்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்களை குத்தகைக்கு எடுத்து பொதுமக்களுக்கு பல உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாகத் தெரிவித்தனர். ஒரு முதலீட்டாளர் ரூ. 1 லட்சத்தை செலுத்தினால், நிறுவனம் 24 மாதங்களுக்கு மாதம் ரூ. 8 ஆயிரம் திரும்பக் கொடுக்கும் எனறும் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீடு செய்த தொகையில் 50 சதவீதம் முதலீட்டாளருக்குத் திருப்பித் தரப்படும். என்றும் தெரிவித்தனர். இதனை நம்பி இந்த நிறுவனத்தில் ரூ.5 லட்சத்தை செலுத்தினேன். ஊக்கதொகை என்ற பெயரில் ரூ.2 லட்சம் தந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக முதலீட்டாளர்களுக்குத் தொகையை வழங்குவதை நிறுத்தினர். பின்னர் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இவ்வாறு அவர் அந்த புகாரில் தெரிவித்து இருந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் மேல் கூடலூரில் உள்ள கே.கே.நகரைச் சேர்ந்த எஸ்.துரைராஜ் (41) அவருடைய மனைவி சாரதா (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது டெபாசிட்டர்களின் நலன்களைப் பாதுகாத்தல் சட்டப்பிரிவு 5, மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
ரூ.1 கோடியே 85 லட்சம் சென்னை, பெங்களூரு, சேலம், கேரளா, ஹைதராபாத், மைசூரு, ஓசூர், ஊட்டி, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் மூலம் 66 முதலீட்டாளர்களிடம் ரூ.1.85 கோடி மோசடி செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.