கோவை ரயில் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி-போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை.!!

வடகோவை – பீளமேடு ரெயில்வே தண்டவாளம் டெக்ஸ்டூல் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த முதியவரின் உடலை சோதனை செய்தனர். அவர் ஸ்வெட்டர் மற்றும் காபி நிற பேண்ட் அணிந்திருந்தார். பின்னர் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.