அதி நவீன வசதியுடன் நிழற்குடை- மகிழ்ச்சியில் கோவை போக்குவரத்து போலீசார்..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் முன்பு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவலருக்கு மின்விசிறியுடன் கூடிய பிரத்தியேக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் நிழற்குடையில் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இது போக்குவரத்து காவலர்கள், மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவையில் மேலும் பல இடங்களில் இது போன்ற நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது.