2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு – மர்ம நபர்களுக்கு வலை..!

கோவை ஆர். எஸ். புரம். பக்கம் உள்ள கருமலை செட்டிபாளையம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் ( வயது 55) இவர் நூற்பாலைகளுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.இவரது வீட்டில் யாரோ மர்மம் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர் .இது குறித்து ரமேஷ் குமார் ஆர். எஸ் .புரம். போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல போத்தனூர், வெள்ளலூர் ரோட்டில் உள்ள ரோஸ் கார்டன் அவென்யூவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி அனுராதா ( வயது 50)இவர் கடந்த 10 ஆண்டுகளாக தனது மகளுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார் .31ஆம் தேதி வீட்டைபூட்டிவிட்டு குருவாயூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் இருந்த ரூ. 50 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர் .இது குறித்து அனுராதா போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.