கோவை வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் நகை,பணம் திருட்டு – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை :சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 56)இவர் கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள தெய்வநாயகி நகர், 3-வது வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் பேக்கரியும் நடத்தி வருகிறார் .இவரது மகன்கள் பிரேம்குமார் ,ஸ்டீபன் ஆகியோர் டைல்ஸ் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்கள். இதற்காக வெள்ளக்கிணறு பகுதியில் குடோன் வைத்துள்ளனர் .இந்த நிலையில் பிரேம்குமார் கடந்த 26 -ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் காளையார் கோவிலுக்கு சென்றார். நேற்று காலை கோவை வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 700 பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. ‘யாரோ திருடி சென்று விட்டனர். இவைகளின்  மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும்..இது குறித்து சரவணம்பட்டி போலீசில் ஆரோக்கியசாமி புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள்.இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.