கோவை நகைக் கடையில் மோதிரம் திருட்டு-டிப் டாப் ஆசாமி கைவரிசை..!

கோவை பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகை கடைக்கு நேற்று டிப்-டாப் உடை அணிந்த ஒரு ஆசாமி வந்தார்.தனக்கு 3 மோதிரங்கள் வேண்டும் என்று கூறினார்.கடை மேனேஜர் கதிரேசன் மோதிரங்களை அவரிடம் எடுத்து காட்டினார். பின்னர் அந்த ஆசாமி தனக்கு ஒரு மோதிரமும் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.அவர் சென்ற பிறகு மோதிரங்களை எண்ணிப் பார்த்தபோது அதில் 4.5கிராம் எடைகொண்ட ஒரு மோதிரம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் கதிரேசன் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.