கோவை போலீசார் அதிரடி வேட்டை… கஞ்சா வியாபாரிகள் கூண்டோடு கைது – கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்..!

கோவையில் கஞ்சா வியாபாரிகள் கூண்டோடு கைது. கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து போலிஸார் நடவடிக்கை..

ரத்தினபுரி பகுதிகளில் கஞ்சா விற்று வந்ததாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பல்வேறு குற்ற பின்னணியில் உள்ள சூரிய பிரகாஷ் கஞ்சா விட்டதாக போலீசாரால் கைது.

செல்வபுரம் பகுதியில் கஞ்சா விட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் பல்வேறு குற்ற பின்னணியில் உள்ள சரவணன் என்பவரை கைது செய்திருக்கின்றது.

குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்றதாக கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் கைது. மாதேஷ் குமார் , சூர்யா , சூரிய பிரகாஷ், சசிந்திரன் உள்ளிட்ட நான்கு பேர் குனியமுத்தூர் போலீசாரால் கைது – சூரிய பிரகாஷ் மீது முன்னதாக குற்ற செயல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் நடந்து வருகின்றன

சிங்காநல்லூர் பகுதியில் கஞ்சா விற்றதாக மணிகண்டன் என்பவர் கைது.

சரவணம்பட்டி பகுதியில் கஞ்சா விற்றதாக சுரேஷ், சுரேஷ் சுப்பிரமணி, சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் கைது – இவர்கள் 3 பேர் மீது முன்னதாக குற்ற செயல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் நடந்து வருகின்றன. கைதான் அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களும், 21 ஆயிரத்து நானூறு ரூபாய் ரொக்க பணமும், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன

ஒரே நாளில் 10 கஞ்சா வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் கமிஷனர் பாலகிருஷ்ணன் அமைத்த தனிப்படையில் போலீசார் ரவுண்டில் கைதாகி இருக்கின்றனர்..