கோவை பெண் டாக்டர் வீட்டில் 5 பவுன் தங்க செயின் திருட்டு..!

கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவில் உள்ள பாவையர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பத்மா ராணி( வயது 37) இவர் கோவை அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அவரது வீட்டில் அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை கழட்டி வைத்து விட்டு தூங்க சென்று விட்டார் . காலையில் பார்த்த போது செயினை காணவில்லை . யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து டாக்டர் பத்ம ராணி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.