கோவை இன்ஜினியர் திடீர் மாயம்..!

கோவை குனியமுத்தூர் பி .கே. புதூர்,பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் .அவரது மகன் மனோஜ் குமார் ( வயது 25) பி.இ.படித்து முடித்துவிட்டு சிட்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார்.அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அவரது தந்தை நாகராஜ் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.