கோவை கல்லூரி மாணவி காதலுடன் ஒட்டம்.!!

கோவை அருகே உள்ள பூலுவபட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் . இவரது மகன் காமினி (வயது 19) இவர் குனியமுத்தூர் நரசிம்மபுரத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 18ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .இந்த நிலையில் காமினி அவரது தந்தைக்கு போன் செய்து தான் சுரேஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களை தேட வேண்டாம் என்று செல்போனில் பேசி உள்ளார்.இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.