யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு.!!

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மூன்றாவது முறையாக அவர் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை வாபஸ் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎஸ் வாசன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. கடந்த மாதம் பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் மீது பிறரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.