கோவை கல்லூரி மாணவி எங்கோ மாயம்..!

கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி, சிவராமன் வீதியை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகள் தில்ஷாத் ( வயது 18) இவர் கோவையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம்ஆண்டு படித்து வருகிறார் .. 4 -ந் தேதி கல்லூரிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாயார் ஆசீனா பானு கோவில்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்