சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு- பைக் ஆசாமி கைது..!

கோவை ஆர் ,எஸ் .புரம். தடாகம் ரோடு .ஏ.கே.எஸ். நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி சாந்தி ( வயது 48)இவர் நேற்று அங்குள்ள முதல் வீதியில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 20 கிராம் தங்கச் சங்கிலி பறித்தான் .அப்போது.சாந்தி செயினை பிடித்துக் கொண்டார். மீதமுள்ள 1.4 கிராம் செயினை பறித்து கொண்டு அந்த ஆசாமி தப்பி சென்று விட்டார். இது குறித்து ஆர் .எஸ். புரம். போலீசில் சாந்தி புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி ,சோலை காலனி சேர்ந்த காளிமுத்து மகன் மாரீஸ்வரன் ( வயது 21) என்பவரை கைது செய்தனர்.நகை மீட்கப்பட்டது.