கோவை மத்திய சிறை கைதி திடீர் உயிரிழப்பு..

கோவை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன். கூலித் தொழிலாளி. இவர் போக்சோ வழக்கில் பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து கடந்த மார்ச் 19 ஆம் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் மற்றும் வலிப்பு நோய் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிறை காவலர்கள் அவரை மீட்டு சிறையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..