அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகளை சேதப்படுத்திய வாலிபர் கைது..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அருள்மிகு அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.இது புகழ்மிக்க பழங்காலத்து கோவிலாகும்.இன்று அதிகாலையில் ஒரு மர்ம ஆசாமி கோவிலில் புகுந்து அங்கிருந்த சாமி சிலைகளை சேதப்படுத்திவிட்டு வெளியே ஓடி வந்தார்.அவரை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் துரத்தி பிடித்து அவிநாசி போலீசில் ஒப்படைத்தனர் .போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் சரவணகுமார் என்பது தெரியவந்தது அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.இவர் எதற்காக சாமி சிலைகளை சேதப்படுத்தினார் ?என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது..