கோவை கூடுதல் எஸ்.பி. வீட்டில் கொள்ளை முயற்சி – மர்ம நபருக்கு போலீஸ் வலை..!

கோவை உப்பிலிபாளையத்தில்உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகம் அருகே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் வீடு உள்ளது. இவர் தீபாவளி பண்டிகைக்காக தனது குடும்பத்துடன் வீட்டைப் போட்டுவிட்டு வெளியூர் சென்று விட்டார்.வீட்டிலிருந்த உதவியாளர் ரூபி கனிமொழி என்பவர் வீட்டில் மின் விளக்கை எரியச் செய்து விட்டு வெளியே சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. அத்துடன் கதவும் திறந்து கிடந்தது .உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது ஒரு ஆசாமி வீட்டில் புகுந்து பொருட்களை திருடி கொண்டிருந்தார். அவர் ரூபி கனிமொழியை கண்டதும் அந்த பொருட்களை அங்கே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமியை தேடி வருகிறார்கள்.